தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகராக அறியப்பட்டவர் மோகன்லால். இவரது நடிப்பில் 2019 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் லூசிஃபயர். இந்த படத்தை பிரபல நடிகர் பிரித்திவிராஜ் தான் இயக்கியிருந்தார். லூசிஃபயர் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது அந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராகியுள்ளது. இந்த படத்திற்கு எம்புரான் என பெயரிட்டுள்ளனர்.

இந்த படத்தில் மோகன்லால், மஞ்சு வாரியார், டோவினோ தாமஸ், பிரித்திவிராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படம் மார்ச் 27 ஆம் தேதி பான் இந்தியா படமாக ரிலீஸ் செய்யப்பட்டது. இந்நிலையில் எம்புரான் படத்திற்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும் என்று கேரள உயர்நீதிமன்றத்தில் பாஜகவின் விவி விஜேஷ் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார். 2002 ஆம் வருடம் கோத்ரா கலவரத்தை தழுவி எடுக்கப்பட்ட காட்சிகளில் இந்திய ராணுவம் குறித்து தேவையற்ற கருத்து கூறப்பட்டுள்ளதாகவும், புலனாய்வு அமைப்புகளின் நம்பகத்தன்மையை சிதைக்கும் விதமாகவும் உள்ளதாகவும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. இந்த படம் சமூகத்தில் அசாதாரண சூழலை உருவாக்கும் வகையில் உள்ளது என்றும் அந்த மனுவில் குறிப்பிட்டார்.