
இந்திய கிரிக்கெட் வீரர் பியூஸ் சாவ்லா. சுழற் பந்துவீச்சாளரான இவர் தற்போது அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இவர் கடந்த 2007 ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை மற்றும் 2011 ஆம் ஆண்டு ஒரு நாள் உலகக் கோப்பையை வென்ற அணியில் முக்கிய பங்கு வகித்தார்.
இவர் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப், மும்பை, சென்னை, கொல்கத்தா உள்ளிட்ட பல அணிகளுக்காக விளையாடியுள்ளார். இவர் ஐபிஎல் போட்டியில் 150 பிளஸ் விக்கெட் எடுத்த முதல் இந்திய ஸ்பின்னர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் இவர் தற்போது அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து முழுமையாக ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.