இந்திய ஆண்கள் கால்பந்து அணியினர் உலகக்கோப்பை போட்டியின் 2-வது சுற்றில் தோல்வியடைந்தனர். அதாவது கத்தார் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளிடம் இந்திய அணி தோல்வி அடைந்தது. இதன் காரணமாக கடந்த மாதம் தலைமை கால்பந்து பயிற்சியாளர் இகோர் ஸ்டிமாக் பதிவி நீக்கம் செய்யப்பட்டார்.

இதைத்தொடர்ந்து தற்போது புதிய கால்பந்து பயிற்சியாளர் நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி இந்திய அணியின் புதிய கால்பந்து பயிற்சியாளராக மனோலா மார்க்கஸ் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்தவர். மேலும் இவர் தற்போது எப்சி கோவா அணியின் பயிற்சியாளராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.