
பூடான் நாட்டின் குல்ட்ரம் பணமும் இந்திய பணமும் ஒரே மதிப்பு கொண்டதாக இருக்கிறது. இந்நிலையில் டெல்லியில் வசித்து வரும் அர்பாஸ்கான் என்பவர் ஒவ்வொரு ஊர்களுக்கும் சென்று சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். இவரை இணையதளத்தில் 5 லட்சம் பேர் பின் தொடர்கிறார்கள். இவர் பூடான் நாட்டை சுற்றி பார்க்க சென்ற நிலையில் அங்கு நம் நாட்டில் உள்ள பாரத் மற்றும் இன்டேன் நிறுவனங்களின் பெட்ரோல் பங்குகள் இருப்பதைக் கண்டு அவர் மிகவும் ஆச்சரியப்பட்டார்.
இதைத்தொடர்ந்து அங்கு விற்கப்படும் பெட்ரோலின் விலையை தெரிந்து கொள்ள அவர் ஆர்வம் காட்டினார். பின்னர் அவர் பார்த்த போது அங்கு ஒரு லிட்டர் பெட்ரோல் விலை இந்திய மதிப்பில் 63.92 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் நிலையில் இந்தியாவை விட அங்கு 37 ரூபாய் வரை குறைவாக விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.
View this post on Instagram