யு-19 ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் பரபரப்பான இறுதிப் போட்டியில், இந்திய அணியை வீழ்த்தி பாகிஸ்தான் இளம் படை சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. இந்த வரலாற்று வெற்றியை பாகிஸ்தான் வீரர்கள் மைதானத்திலும், ஓய்வறையிலும் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடினர்.
குறிப்பாக, சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், பாகிஸ்தான் வீரர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ‘துரந்தர்’ என்ற பிரபல பாடலுக்கு உற்சாகமாக நடனமாடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். கடினமான போராட்டத்திற்குப் பிறகு கிடைத்த இந்த வெற்றியை பாகிஸ்தான் ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், வீரர்களின் இந்த வெற்றி நடனம் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
Now thats the Real Celebrations on #F9LA by Boys 🇵🇰🏆#U19AsiaCupfinal#INDvPAK #dhurendhar pic.twitter.com/207xY3bSQP
— Malik Farhan Pervaiz (@FarhanAries008) December 21, 2025
“>
இந்த வெற்றி பாகிஸ்தான் இளையோர் அணிக்கு ஒரு மிகப்பெரிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. இறுதிப் போட்டி வரை சிறப்பாக விளையாடிய இந்திய அணி, கடைசி நேரத்தில் பாகிஸ்தானின் அபாரமான பந்துவீச்சு மற்றும் பேட்டிங்கால் தோல்வியைத் தழுவியது.
மேலும் களத்தில் பரம எதிரிகளாகக் கருதப்படும் இரு அணிகளுக்கு இடையிலான இந்த மோதல் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்த நிலையில், பாகிஸ்தான் வீரர்களின் இந்த வைரல் நடனம் இரு நாட்டு கிரிக்கெட் வட்டாரங்களிலும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட இந்த வீடியோ, சில மணி நேரங்களிலேயே லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்று வைரல் ட்ரெண்டாகி உள்ளது.
