
சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் மூலமாக வந்துள்ளது. இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
மோப்பநாய் உதவியுடன் காவல்துறையினர் சோதனை நடத்திய நிலையில் அங்கு வெடிகுண்டு எதுவும் இல்லை என்பது தெரியவந்தது. இதன் காரணமாக அது புரிளி என்பது தெரிய வந்தது. இதை தொடர்பாக கோட்டூர்புரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்த விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதுவரையில் 17 முறை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.