
உள்துறை மந்திரி அமித்ஷா திமுக 36,000 கோடி வரை ஊழல் செய்துள்ளதாகவும் உதயநிதி ஸ்டாலினும் முதல்வர் ஸ்டாலினும் ஊழல்வாதிகள் என்றும் கடுமையாக விமர்சித்த நிலையில் அதிமுக பாஜக கூட்டணியையும் உறுதிப்படுத்தினார். தற்போது முதல்வர் ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, ஜெயலலிதா ஊழல் வழக்கில் இரண்டு முறை பதவி இழந்து நான்கு வருஷங்கள் ஜெயில் தண்டனை பெற்றுள்ளார். இப்படிப்பட்ட அதிமுகவை மேடையில் வைத்துக் கொண்டே அமித்ஷா ஊழல் பற்றி பேசியதை கேட்டு தமிழ்நாடு மக்கள் சிரிக்கிறார்கள்.
அதன் பிறகு உள்துறையை கையில் வைத்திருக்கும் அமித்ஷா தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு என வாய்க்கு வந்தபடி பேசுவது கண்டிக்கத்தக்கது. இது மணிப்பூர் அல்ல தமிழ்நாடு என்பதை நான் அவருக்கு நினைவு படுத்திக் கொள்கிறேன். ஒன்றரை வருடங்களாக 250 பேரை படுகொலை செய்த அந்த மாநிலத்தை ஆண்ட பாஜக அங்கு அமைதியை நிலைநாட்ட முடியாமல் இங்கு வந்து சட்டம் ஒழுங்கு பற்றி பேசிக் கொண்டிருக்கிறது என்று கூறினார். மேலும் அதிமுகவுடன் கூட்டணி வைத்ததும் ஒரு ஊழல் தான் என்றும் கொத்தடிமைகளின் கூடாரம் என்றும் கண்டிப்பாக 2026 இல் தமிழ்நாட்டு மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள் என்றும் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.