
பொதுவாக ஒரு மரம் என்றால் அதில் பூ, காய்,கனிகள் தான் இருப்பது வழக்கம். அனால் அதற்கு மாறாக உலகமே வியந்து பார்க்கும் அளவிற்கு ஒரு தோட்டத்தில் பூக்களுக்கு பதிலாக வெறும் பாம்புகள் மட்டுமே தொங்கும் காட்சி இணையத்தில் அதிகமாக வைரல் ஆகி வருகிறது. தோட்டத்தில் காய், கனிகளை வளர்ப்பது போல பாம்புகளை வளர்த்து வருகிறார்கள். வியட்நாமில் Trại rần Đồng Tâm என்ற ஒரு பண்ணையில் பாம்புகள் வளர்க்கப்படுகிறது.
மற்ற தோட்டங்களில் பழங்கள் காய்கறிகள் பயிரிடுவது போல இங்கு பாம்புகள் வளர்க்கப்படுகிறது. பாம்புகளின் விஷத்தில் இருந்து மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. இதனை பார்ப்பதற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். 12 ஹெக்டேர் பரப்பளவில் பறந்து விரிந்த இந்த தோட்டத்தில் பல்வேறு வசதிகள் உள்ளது. ஒவ்வொரு வருடமும் சுமார் 1500 பேர் பாம்பு கடி சிகிச்சைக்காக இந்த தோட்டத்திற்கு வருகிறார்கள். இந்த விஷப் பாம்புகள் நிறைந்த தோட்டம் தற்போது சுற்றுலா தளமாக மாறி உள்ளது.