வரிகள், பாடகர் என அனைத்தும் சேர்ந்து தான் பாடல் என்பதால் பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? என இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு எதிரான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் பாடல்கள் விற்பனை மூலம் வணிக ரீதியாக இளையராஜா பெற்ற தொகை யாருக்கு சொந்தம் என்பது மேல்முறையீட்டு வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என தெரிவித்துள்ளது.

ஒப்பந்தம் முடிந்த பிறகும் காப்புரிமை பெறாமல், இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்திய விவகாரத்தில் எக்கோ மற்றும் அகி மியூசிக் நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்க கோரி தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு விசாரணை ஜூன் 2வது வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.