உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள ஹமீர்பூர் பகுதியில் ஒரு பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பணி புரியும் ஆசிரியர் ஒருவர் மாணவிகளுக்கு ஆபாசம் மெசேஜ் அனுப்பியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த பள்ளியின் மாணவி மற்றும் அவருடைய குடும்பத்தினர் அந்த ஆசிரியரை செருப்பால் அடித்துள்ளனர்.

அந்த ஆசிரியர் பல மாணவிகளுக்கு ஆபாச மெசேஜ் அனுப்பியுள்ளார். மேலும் இதனால் பொறுத்துக் கொள்ள முடியாத ஒரு மாணவி ஒரு கட்டத்தில் தன்னுடைய குடும்பத்தினருடன் வந்து அந்த ஆசிரியரை செருப்பால் அடித்து வெளுத்து விட்டார். மேலும் இது தொடர்பான வீடியோஸ் சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் விசாரணை நடைபெற்று வருகிறது.