ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 27-வது லீக் போட்டி நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்ற நிலையில் பஞ்சாப்பை வீழ்த்தி ஹைதராபாத் வெற்றி பெற்றது. அதாவது நேற்று நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 245 ரன்கள் எடுத்தது. அதன்பிறகு களமிறங்கிய ஹைதராபாத் அணியில் அபிஷேக் ஷர்மா 141 ரன்கள் வரை எடுத்த நிலையில் இறுதியில் 18.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 247 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப்பை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த வெற்றியால் ஹைதராபாத் அணி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருந்து 8-ம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இதன் காரணமாக தற்போது சென்னை அணி புள்ளி பட்டியலில் கடைசி இடத்திற்கு சென்று விட்டது. நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பையை வீழ்த்தி சென்னை வெற்றிபெற்ற நிலையில் அதற்கு அடுத்த தொடர்ச்சியாக 5 போட்டிகளிலும் தோல்வியை சந்தித்த சென்னை கடைசி இடத்தில் இருப்பது ரசிகர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதேபோன்று மும்பை அணியும் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று 9-ம் இடத்தில் இருக்கிறது. மேலும் ஐபிஎல் போட்டியில் அதிக முறை கோப்பைகளை வென்ற மும்பை மற்றும் சென்னை அணிகள்  தற்போது கடைசி இடத்தில் இருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஆண்ட பரம்பரைக்கு வந்த நிலைமையை பார்த்தீர்களா என்று ரசிகர்கள் நொந்து போய் உள்ளனர்.