மும்பையின் பாந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸ் பகுதியில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகத்திற்கு வருகை தரும் விண்ணப்பதாரர்கள், பாதுகாப்பு காரணங்களால் பைகளை தூதரகத்திற்குள் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. இதனால், பலர் சிரமங்களை சந்தித்தனர். இந்த சந்தர்ப்பத்தை புரிந்த மும்பைச் சேர்ந்த ஒரு ஆட்டோ ஓட்டுநர், தனது வண்டியை தூதரகத்துக்கு அருகே நிறுத்தி, மக்கள் பைகளை வைக்க வசதியாக ஒரு தனிப்பட்ட சேவையை தொடங்கினார்.

அதிகாரப்பூர்வமாக எந்த ஒரு பை சேமிப்பு மையமும் அப்பகுதியில் இல்லாததால், பயணிகள் இந்த சேவையை விரும்பியுள்ளனர். தினமும் 20 முதல் 30 பேர் வரை இந்த சேவையை பயன்படுத்தினர். வாடிக்கையாளர் ஒருவரிடமிருந்து ரூ.1,000 வரை பெற்ற அந்த ஓட்டுநர், தினசரி ரூ.20,000 முதல் ரூ.30,000 வரை சம்பாதித்து வந்ததாக கூறப்படுகிறது. மாத வருமானம் சுமார் ரூ.5 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரை இருந்திருக்கலாம் என கணக்கிடப்படுகிறது.

இந்த தகவல் லென்ஸ்கார்ட் நிறுவனத்தின் தயாரிப்புத் தலைவர் ராகுல் ரூபானி தனது லிங்க்ட்இன் பதிவில் பகிர்ந்ததன் மூலம் வைரலானது. இதையடுத்து மும்பை போலீசார் நடவடிக்கை எடுத்து, பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதாக குற்றம் சாட்டி, ஆட்டோ ஓட்டுநர் மற்றும் மேலும் 12 பேரை அழைத்து எச்சரித்தனர்.

தற்போது, யாரும் இவ்வகை சேவையை தொடராமல் நிறுத்தியுள்ளனர். சமூகத்தில் தனது புத்திசாலித்தனத்தால் உயர்ந்த அந்த ஆட்டோ ஓட்டுநர், ஒரு லிங்க்ட்இன் பதிவால் சேவையை இழக்க வேண்டிய நிலைக்கு சென்றார் என்பது வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.