நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வாழவந்தி பகுதியில் சுரேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்க்கிறார். கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு சுரேந்திரனுக்கு சினேகா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் குடும்ப பிரச்சனை காரணமாக சினேகா கோபத்தில் தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் மன உளைச்சலில் இருந்த சுரேந்தர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

மறுநாள் காலை தூங்கி எழுந்த சுரேந்திரனின் தந்தை செல்வராஜூம், தாய் பூங்ககொடியும் மகன் தூக்கில் சடலமாக தொங்குவதைக் கண்டு கதறி அழுதனர். பின்னர் மன உளைச்சலில் அவர்களும் தூக்கிட்டு தற்கொலை செய்தனர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மூன்று பேரின் உடல்களையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.