குஜராத்தைச் சேர்ந்த 10 வயது சிறுமி இன்ஸ்டாகிராம் மூலம் 15 வயது சிறுவனுடன் பேசி உள்ளார். கடந்த செவ்வாய் கிழமை வீட்டில் இருந்த சிறுமியை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் சிறுமியை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் அவர் கிடைக்காததால் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அந்தப் புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மறுநாள் சிறுமி இருக்கும் இடத்தை கண்டறிந்து அவரை மீட்டனர். இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் அந்த சிறுமியை இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய 16 வயது சிறுவன் கடத்தி சென்ற பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. அந்த சிறுவனை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.