மதுரை மாவட்டத்திலுள்ள ஆரப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து பல்வேறு ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இங்கு பக்ரீத் பண்டிகை முடிவடைந்து பலரும் சொந்த ஊருக்கு திரும்பி கொண்டிருந்தபோது திருப்பூர் செல்லும் அரசு பேருந்து ஒன்று அங்கு பயணிகளை ஏற்றியவாறு நின்று கொண்டிருந்தது. ஆனால் பேருந்து எடுக்க தாமதமானதால் ஓட்டுநர் கணேசனிடம் பயணிகள் கேட்டுள்ளனர். அப்போது அவர் மேலாளர் கூறினால்தான் பேருந்து எடுக்க முடியும் என கூறியுள்ளார். இதனால் பயணிகள் நேரடியாக சென்று அங்கிருந்த உதவி மேலாளரிடம் பேருந்தை விரைவாக எடுக்கும்படி கூறியுள்ளனர். அதற்கு அவர் அந்த ஓட்டுனர் மீது நடவடிக்கை எடுக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது எனவே வேறு பேருந்தில் செல்லுங்கள் என கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த பயணிகள் அவருடன் தகராறு செய்த நிலையில் அவர்களை உதவி மேலாளர் தகாத வார்த்தைகளால் பேசி திட்டியதாக கூறப்படுகிறது. அப்போது அங்கிருந்து அதிகாரிகளும் பயணிகளுக்கு ஆதரவாக பேசியதால் அவர்களுக்கும் மேலாளருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதற்கிடையில் அங்கு வந்த பேருந்து ஓட்டுநர் கணேசன், அதிகாரிகளை திட்டியபடி உள்ளே சென்றார். அப்போது உதவி மேலாளர் மாரிமுத்து திடீரென ஓட்டுநர் கணேசனை செருப்பால் அடித்துவிட்டார். நீ பயணிகளை வைத்து தூண்டி விடுகிறாயா? என கேட்டபடியே அவரை செருப்பால் அடித்த நிலையில் இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் ஆகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் இதைத் தொடர்ந்து உதவி மேலாளர் மாரிமுத்துவை பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

 

மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் அரசுப் பேருந்து ஓட்டுனரை பேருந்து நிலைய மேலாளர் மாரிமுத்து என்பவர் செருப்பால் அடித்துள்ளார். pic.twitter.com/3wjIAWi66L

— Sangeetha -TVK✨ (@sangeet29332013) June 9, 2025