
தமிழக அரசானது பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்கு பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில் இலவச பஸ் பாஸ் திட்டம், காலை உணவு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனால் மாணவர்கள் பயனடைந்து வருகிறார்கள்.
இந்த நிலையில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சேமிப்பு கணக்குகளை தொடங்குவதற்கு அஞ்சல் துறையோடு தமிழக பள்ளி கல்வித்துறை புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.