விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு இன்று விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி வி சாலையில் நடந்து முடிந்தது. மாநாட்டுக்கு வந்த தொண்டர்கள் விஜய் என்னவெல்லாம் பேசப்போகிறார் என எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தனர். அப்போது விஜய் தனது எழுச்சிமிக்க பேச்சால் ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். தனது அரசியல் கொள்கைகள் கோட்பாடுகள், மக்கள் நலன் என அனைத்தைப் பற்றியும் விளக்கமாக பேசினார்.

பெண்களுக்கான பாதுகாப்பு, இளைஞர்கள் எதிர்காலம் கொடி விளக்கம், அரசியல் தலைவர் முன்னோடிகள் என மக்களை உற்சாகப்படுத்தும் வகையில் உணர்ச்சிகரமாக விஜய் பேசினார். விஜய் பேசும்போது இந்த அரசியல் நமக்கு எதற்கு? நடித்தோமா.. நாலு காசு பார்த்தோமா என்றுதான் ஆரம்பத்தில் நானும் நினைத்தேன். நாம மட்டும் நல்லா இருக்கணும் என்று நினைப்பது சுயநலம் இல்லையா? நம்மள வாழ வைத்த மக்களுக்கு எதுவும் செய்யாமல் இருப்பது நல்ல விசுவாசமாக இருக்கும எல்லா கேள்விகளுக்கும் விடை கண்டுபிடிக்க யோசித்தது தான் இந்த அரசியல் என பேசினார்.