
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் கேர்லி பகுதியில் வீரூ என்ற மான் சிங் ஜடவ் என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதலில் இது இயல்பான மரணம் என மனைவி அனிதா கூறியிருந்தாலும், 48 மணி நேரத்துக்குள் அவர்களது 9 வயது மகன் வெளியிட்ட உண்மைகள் போலீசாரை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
மகன் அளித்த வாக்குமூலத்தின் படி, அந்த இரவில் தாயான அனிதா வீட்டின் கதவை திறந்து வைத்தார். நள்ளிரவு அளவில் “காஷி அங்கிள்” என அவர் அழைக்கும் காஷிராம் பிரஜாபத் உள்ளிட்ட நால்வர் வீட்டிற்குள் நுழைந்தனர்.
அறைக்குள் நுழைந்த அவர்கள், சோபாவில் தூங்கிக்கொண்டிருந்த வீரூவின் முகத்தில் தலையணை வைத்து அமுக்கி கொலை செய்தனர். சிறுவன் அந்த தருணத்தில் விழித்திருந்தாலும், பயத்தால் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்ததாக கூறியுள்ளார்.
அனிதா மற்றும் காஷிராம், கடந்த சில தொடர்பில் இருந்தது தெரியவந்துள்ளது. அனிதா கெர்லி பகுதியில் சிறிய கடை நடத்தி வந்தார்; அதே பகுதியில் காஷிராம் ஒரு கச்சோரி விற்பனையாளராக இருந்தார்.
இருவருக்கும் நெருங்கிய உறவு ஏற்பட்ட நிலையில், வீரூவை கொலை செய்ய திட்டமிட்டனர். கொலைக்காக நான்கு நபர்களை ₹2 லட்சம் பணம் கொடுத்து நியமித்தனர். பிரேத பரிசோதனையிலும் வீரு கொலை உறுதி செய்யப்பட்டது.
வீரூவின் சகோதரர் கப்பர் ஜடவ் அளித்த புகாரின் பேரில், போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அருகிலுள்ள பகுதிகளில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததோடு, அழைப்பு விவரங்கள் அனைத்தையும் பரிசோதித்தனர்.
இதன் மூலம் அனிதா, காஷிராம் மற்றும் நியமிக்கப்பட்ட கிலர்களில் ஒருவரான பிரிஜேஷ் ஜடவ் ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இன்னும் மூவரை கைது செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.