கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் திருப்பதி நகர கிழக்கு பகுதியில் ஸ்ரீதர் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் ரக்ஷனா(28) கோயம்புத்தூரில் பல் மருத்துவம் படித்து முடித்துவிட்டு சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.டி.எஸ் படிப்பில் சேர்ந்து படித்து கொண்டிருக்கிறார். இவர் சக மாணவிகளுடன் வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி கல்லூரிக்கு சென்று வந்தார். இதனையில் ரக்ஷனா தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்வதற்காக சிதம்பரத்திற்கு வந்து தனி அறையில் தங்கி இருந்தார். அவர் அடிக்கடி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது.

சம்பவம் நடைபெற்ற அன்று கடுமையான வயிற்று வலியால் துடித்த ரக்ஷனா தனது தாயை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அதன்பிறகு தோழிகள் வெளியே சென்ற நேரத்தில் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இளம்பெண்ணின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.