ஊடகங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோ, பலரை ஆச்சரியத்துக்கும், அதிர்ச்சிக்கும் உள்ளாக்கி உள்ளது. சாலையில் பயணிக்கும் நான்கு நபர்களில் ஒருவர், தன்னுடைய புத்திசாலித்தனத்தால் மரணத்தை மயிரிழையில் தவிர்த்துள்ளார்.

இந்த வீடியோ, @garrywalia_ என்ற கணக்கில் X பக்கத்தில் பதிவேற்றப்பட்டதுடன், சில மணி நேரங்களுக்குள் மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்றுள்ளது.

காணொளியில், நான்கு பேர் ஒரே பைக்கில் பயணம் செய்து கொண்டிருக்கும் காட்சி முதலில் தெரிகிறது. எதிர்புறத்தில் வந்த மற்றொரு பைக்கைத் தவிர்க்க, அவர்கள் வண்டியை அதே  வேகத்துடன் திருப்ப முயற்சிக்கிறார்கள்.

இதனால்  கட்டுப்பாட்டை இழந்த பைக், சாலையோர சாக்கடையில் விழுகிறது. ஆனால், அதில் பின்புறம் அமர்ந்திருந்த ஒருவர், தன்னுடைய மூளையைப் பயன்படுத்தி, சாக்கடைக்கு அருகிலிருந்த வேலியைப் பிடித்துக்கொண்டு உயிர் தப்பினார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளதோடு, அந்த நபரின் புத்திசாலித்தனத்தை பாராட்டும் கருத்துகள் பரவலாக பதிவாகி வருகின்றன. “மரணத்திலிருந்து தப்பித்த அந்த நபர், தைரியம் மற்றும் அதிர்ஷ்டத்தின் நிஜமான எடுத்துக்காட்டு” என்று ஒருவர் பதிவு செய்திருந்தார்.

சாலை விதிகளை மீறி ஓட்டும் மக்கள் எண்ணிக்கைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இந்த வீடியோ, வேகத்திலும் மேலாக, பொறுமை மற்றும் பதற்றநேரத்தில் புத்திசாலித்தனமான முடிவுகள் எடுப்பது முக்கியம் என்பதை மீண்டும் நினைவூட்டுகிறது. இந்தச் சம்பவம் சமூக ஊடகங்களில் விவாதிக்கப்படும் ஒரு முக்கிய காணொளியாக மாறியுள்ளது.