இணையத்தில் லைக்குகள் மற்றும் பார்வைகளை பெறும் ஆசையில் சிலர் உயிருக்கே ஆபத்தான செயல்களில் ஈடுபடுகின்றனர். இதற்குச் சமீபத்திய எடுத்துக்காட்டாக, @Studentgyaan என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், இருவர் தரையில் படுத்த நிலையில், ஒரு பெரிய யானை அவர்களை மிதிக்காமல் நடந்து செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளன. யானையின் அருகில் ஒரு பாகன் இருந்தாலும், இந்த செயல் மிகவும் ஆபத்தானது எனக் கருதப்படுகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Studentgyaan (@studentgyaan)

வீடியோவில், தரையில் விரிக்கப்பட்ட பாயின் மீது இரண்டு பேர் படுத்திருப்பதை காணலாம். யானை மெதுவாக நடந்து வந்து, அவர்களைக் கடந்து சென்றபோது, யானையின் காலடி சில சென்டிமீட்டர்கள் விலகி இருந்தால், அவர்கள் பிழைப்பதே சந்தேகமாக இருந்திருக்கும் என சமூகத்தில் விமர்சனங்கள் எழுந்துள்ளன. பலர் இதை “தைரியம் அல்ல, முட்டாள்தனம்” எனக் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்த வீடியோ வைரலானதுடன், பலர் அதற்குத் தகுந்த கேலி மற்றும் விமர்சனக் கருத்துகளை பதிவு செய்துள்ளனர். “இந்த மாதிரி மசாஜ் யாருக்குக் கிடைக்கும்!” என ஒருவர் எழுத, “இந்த மசாஜ் உடலை ரிலாக்ஸ் செய்யாது, உடைக்கலாம்!” என மற்றொருவர் பதிவு செய்துள்ளார்.

விலங்குகளுடன் விளையாடும் போது எச்சரிக்கையும் மரியாதையும் அவசியம் என்பதை மறந்து, பார்வைக்காக வேடிக்கையை நாடும் செயல்கள் எப்போது வேண்டுமானாலும் பயங்கர விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்பதற்கு இது ஒரு எச்சரிக்கை என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.