
அகமதாபாத் ஊழல் தடுப்புப் பிரிவின் (ATS) அதிகாரிகள் சமீபத்தில் இந்தியாவிலேயே மிகப்பெரிய சோதனைகளில் ஒன்றை நடத்தி, மக்கள் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளனர். இந்த சோதனையின் போது ரூ.100 கோடிக்கு மேற்பட்ட மதிப்புடைய 88 கிலோ தங்கம், 19.6 கிலோ தங்க நகைகள், ரூ.1.3 கோடி ரொக்கம் மற்றும் 11 ஆடம்பர கைக்கடிகாரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை அகமதாபாத்தின் பட்லி பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் நடந்தது.
மும்பையைச் சேர்ந்த முதலீட்டு மற்றும் பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்ட மஹிந்திரா மற்றும் அவரது மகன் மேக் ஷா என்பவர்களின் வீடுகள் குறிவைக்கப்பட்டு இந்த சோதனை நடைபெற்றது. இருந்தாலும், அவர்கள் அந்த வீட்டில் வசிக்கவில்லை எனவும், முன்கூட்டியே தலைமறைவானதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில், மறைக்கப்பட்டிருந்த சொத்துக்களை கண்டறிய முன்னெடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையில், அதிகாரிகள் தங்க பிஸ்கட்கள், நகைகள் மற்றும் ரூபாய் நோட்டுகளை கைப்பற்றினர்.
பறிமுதல் செய்யப்பட்ட 88 கிலோ தங்கத்தில், 52 கிலோ தங்கம் வெளிநாடுகளிலிருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டதாகவும், அது சுங்கச் சட்டங்களை மீறியதாகவும் கூறப்பட்டுள்ளது. தற்போது மஹிந்திரா மற்றும் மேக் ஷா தலைமறைவாக உள்ள நிலையில், அவர்களை தேடி மாநிலம் முழுவதும் தேடுதல் வேட்டை வலுப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த வழக்குடன் தொடர்புடைய அனைத்து சட்டவிரோத நடவடிக்கைகளுக்கும் விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது.