டிக்டாக் செயலி வாயிலாக பிரபலமானவர் தான் ஜி.பி.முத்து. இவரின் நெல்லை பேச்சுக்கும், நையாண்டியாக பதிவேற்றும் வீடியோவிற்கும் தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கின்றனர். டிக்டாக் தடைசெய்யப்பட்ட பின் யூடியூப், இன்ஸ்டாகிராம் என அனைத்து சமூகவலைத்தளங்களில் வலம் வர ஆரம்பித்தார்.

அதன்பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இவர், சில நாட்களே தாக்கு பிடித்தார். தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்குபெற்றுள்ளார். இந்நிலையில் ஜி.பி.முத்து தன்னுடைய தந்தைக்கு புது பைக்கை வாங்கி கொடுத்துள்ளார். அந்த வீடியோ வெளியான நிலையில், ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து சொல்லி வருகின்றனர்.