தமிழகத்தில் சமீபத்தில் நடந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் போது புதிதாக 11 அரசு மற்றும் கலை கல்லூரிகளை தொடங்குவதாக அறிவித்திருந்தனர்.

அதன்படி தற்போது புதிதாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை தொடங்கிவிட்டதாக முதல்வர் ஸ்டாலின் பெருமிதத்துடன் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வீடியோவை வெளியிட்டு பகிர்ந்துள்ளார். இது தொடர்பான வீடியோவை வெளியிட்ட அவர் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், மார்ச் மாதம் தான் தமிழக பட்ஜெட்டில் புதிதாக 11 கல்லூரிகளை திறப்பதாக அறிவித்திருந்தோம்.

“>

 

இதனை சற்றும் தாமதிக்காமல் 2025-26 கல்வி ஆண்டில் செயல்படும் வகையில் தற்போதே திறந்து விட்டோம். மேலும் புதிய 11 கல்லூரிகளையும் இந்த ஆண்டு முதல் செயல்படும் வகையில் திறந்து விட்டதாக பதிவிட்டுள்ளார்.