நாடு முழுவதும் குடியரசு தின விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும் நிலையில் சென்னையில் உள்ள மெரினா கடற்கரையில் தமிழக அரசு சார்பில் குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது. ஆளுநர் ரவி கொடியேற்றி விழாவினை தொடங்கி வைத்தார். இந்நிலையில் குடியரசு தின விழாவை முன்னிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணிபுரிந்தவர்களுக்கு விருதுகள் வழங்கி வருகிறார். அதன்படி வீர தீர செயலுக்கான அண்ணா பதக்கம் விருதினை சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னணி தீயணைப்பு வீரரான க. வெற்றிவேல் பெற்றுள்ளார்.

கோட்டை அமீர் மத நல்லிணக்கம் விருதினை ராமநாதபுரத்தைச் சேர்ந்த எஸ்ஏ அமீர் அமிஷா பெற்றுள்ளார். அதிக உற்பத்தி திறன் பெறும் விவசாயிக்கான வேளாண்மை துறையின் சிறப்பு விருந்தினை தேனி மாவட்டத்தைச் சேர்ந்த முருகவேல் பெற்றுள்ளார். இதனையடுத்து சிறந்த காவல் நிலையத்திற்கான விருதினை மதுரை மாநகரம் பெற்றுள்ளது. மேலும் சிறந்த காவல் நிலையத்திற்கான இரண்டாம் பரிசினை திருப்பூர் மாநகரமும் மூன்றாம் பரிசினை திருவள்ளூர் மாவட்டமும் பெற்றுள்ளது.