
மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள பொது மருத்துவமனையில் ஒரு பெண் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அறுவை சிகிச்சையின் போது குடும்பத்தினரின் ஒப்புதல் இல்லாமல் மருத்துவர்கள் அந்த பெண்ணின் கர்ப்பப்பையை அகற்றி உள்ளனர். அப்போது அதிக அளவு ரத்தப்போக்கு ஏற்பட்டு அந்த பெண் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த உறவினர்கள் அந்த பெண்ணின் இறப்பிற்கு மருத்துவர்களின் அலட்சியம் தான் காரணம் என குற்றம் சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை பெண்ணின் உடலை வாங்க மாட்டோம் என கூறியுள்ளனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகுதான் பெண் உயிரிழந்ததற்கான உண்மையான காரணம் தெரியவரும் என போலீசார் கூறியுள்ளனர். இந்த விவகாரம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.