
சாம்பியன்ஸ் டிராபி முதல் லீக் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக படுதோல்வி அடைந்த பாகிஸ்தான் அணி சமீபத்தில் இந்தியாவுக்கு எதிரான லீக் போட்டியிலும் தோல்வியை சந்தித்தது. பாகிஸ்தான் அணியானது 49.3 ஓவர்களில் 241 ரன்கள் தான் அடிக்க முடிந்தது. 43வது ஓவரிலேயே இலக்கை எட்டி ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபாரமான வெற்றியை பெற்றது இந்திய அணி. இந்த நிலையில் பாகிஸ்தான் அணி எப்படி படுமோசமாக சொதப்பி அரை இறுதி வாய்ப்பை இழந்துவிட்ட நிலையில் அந்த அணியை பலரும் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் பாகிஸ்தானின் முன்னாள் தேர்வு குழு தலைவர் முகமது ஹதீஸ் கடுமையாக விமர்சித்துள்ளார். அதில், “பாகிஸ்தான் அணியின் மூன்று முக்கிய வேக பந்து வீச்சாளர்கள் ஹரிஸ் ரௌப், நஷிம் ஷா மற்றும் ஷாஹீன் அப்ரீதி ஆகியோர், அடுத்தடுத்து ICC தொடர்களில் சொதப்பி வருகிறார்கள். அந்த மூன்று பேரையும் அணியில் இருந்து உடனே நீக்கிவிட்டு மாற்றாக திறமையான பலரை சேர்க்க வேண்டும். பாகிஸ்தானில் திறமையான பல வேகப்பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள் .அவர்களை அணிக்கு கொண்டுவர வேண்டும். இந்த வேலையை செய்தால் மட்டும் தான் பாகிஸ்தான் அணியால் மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப முடியும்” என்று கூறியுள்ளார்..