இன்று உலக அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொருவரும் தங்களுடைய அம்மாவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தாயில்லாமல் இந்த உலகத்தில் எந்த உயிர்களும் இல்லை. ஒவ்வொரு உயிருக்கும் உலகத்தை காட்டும் அம்மாவின் அருமைகளை தமிழ் சினிமாவும் காட்ட தவறியதில்லை. அம்மாவின் அன்பை அவ்வளவு அழகாக காட்டியுள்ளது தமிழ் திரையுலகம் அன்னையர்.

இந்நிலையில் அன்னையர் தினத்தை முன்னிட்டு ட்விட்டரில் நடிகர் சூரி. “உலகில் எந்த மூலையில் இருந்தாலும் ‘என்னடா சாப்பிட்டியா’ ன்னு அம்மா கேட்டவுடன் அத்தனை களைப்பும் ஒரு நொடியில் கரைந்து போகும். இறைவன் எல்லா நேரமும் நம்முடன் இருக்க முடியாது அதனால் தான் தாயை படைத்தான். தெய்வங்களாக பூமியில் வாழும் அத்தனை தாய்மார்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துகள்” என குறிப்பிட்டுள்ளார்.