உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ஜலால் பகுதியில் ஒரு பெண் செவிலியர் வேலை பார்க்கிறார். இவருக்கு திருமணம் ஆனது. அதே கிராமத்தைச் சேர்ந்த வேறு ஒரு நபருடன் அந்த பெண்ணுக்கு கள்ளத்தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. நேற்று காலை அந்த பெண் தனது ஸ்கூட்டரில் வேலைக்கு சென்றுள்ளார். அப்போது அந்த பெண்ணை நான்கு பேர் வழிமறித்து புதருக்குள் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

அதில் இரண்டு பேர் அந்த பெண்ணை கடுமையாக தாக்கி அவரது அந்தரங்க உறுப்பில் மிளகாய்த்தூளை தூவி குச்சியை வைத்துள்ளனர். இதனால் படுகாயம் அடைந்த பெண் அங்கிருந்து எப்படியோ தப்பித்து தனது கணவரிடம் நடந்தவற்றை கூறியுள்ளார். உடனே அவர் தனது மனைவியை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து காவல் நிலையத்திலும் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.