
சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் குஹாய் நகரில் விளையாட்டு அரங்கம் அமைந்துள்ளது. அந்த அரங்கிற்கு வெளியே 70-க்கும் மேற்பட்டால் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தனர். இந்த நிலையில் அதிவேகமாக வந்த கார் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தவர்கள் மீது மோதியதில் பெண்கள், குழந்தைகள் உட்பட 35 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 43 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அந்த காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 62 வயதான பென் என்ற நபரையும் போலீசார் கைது செய்தனர். அவர் தற்போது கோமா நிலையில் இருப்பதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விவாகரத்து காரணமாக சொத்து பிரிப்பதில் அதிருப்தி ஏற்பட்டதால் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தவர்கள் மீது பென் காரை மோதியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.