சமூக வலைதளங்களில் தற்போது ஒரு வீடியோ வைரலாகி வருகிறது, அதில் விமான நிலையப் பணியாளர் ஒருவர் பயணியிடம் மிகவும் கடுமையாகவும், மரியாதையற்ற முறையிலும் நடந்துகொள்வதைக் காண முடிகிறது. அந்தப் பெண் ஊழியர் பயணியை மிரட்டும் தோரணையில் கண்களை உருட்டி கோபமாகப் பேசுகிறார்.

இந்தச் சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவியதை அடுத்து, பணி இடத்தில் ஊழியர்கள் பயணிகளிடம் நடந்துகொள்ள வேண்டிய அடிப்படை நாகரிகம் மற்றும் கண்ணியம் குறித்துப் பலரும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

“>

இருப்பினும், அந்தப் பெண் ஊழியரின் இத்தகைய ஆணவமான மற்றும் அலட்சியமான செயலுக்கு, உடனடி மற்றும் தகுந்த பாடம் புகட்டப்பட்டது. பயணியிடம் எல்லை மீறி நடந்துகொண்ட அந்த ஊழியரின் செயல் குறித்த ஆதாரங்கள் வெளியானதும், சம்பந்தப்பட்ட நிர்வாகம் அந்தப் பெண் ஊழியர் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளது.