முன்னாள் ஆந்திர முதல்வரும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஒய்.எஸ் ஜெகன்மோகன் ரெட்டி நேற்று முக்கிய நிர்வாகியான வல்லப்பனேனி வம்சியை பார்ப்பதற்காக விஜயவாடா சென்றார். இந்த நிலையில் ஜெகன்மோகன் ரெட்டி வருவதை அறிந்த மக்கள் அவரது காரை வழிமறித்து உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் அவரை பார்ப்பதற்காக திரண்டு நின்றனர். அந்த கூட்டத்தில் ஒரு சிறுமி ஜெகன் மோகன் ரெட்டியை பார்க்க வேண்டும், அவருடன் சேர்ந்து புகைப்படம் எடுக்க வேண்டும் என தேம்பி தேம்பி அழுதார்.

அந்த சிறுமி ஜெகன் அண்ணா ஜெகன் அண்ணா என அழுது கொண்டே தனது செய்கை மூலம் எமோஷனாக செல்ஃபி எடுத்துக் கொள்ளுமாறு கேட்டார். அதனை பார்த்த ஜெகன் மோகன் ரெட்டி காரிலிருந்து வெளியே வந்து அந்த சிறுமிக்கு பாசமாக முத்தம் கொடுத்தார். அதன்பிறகு சிறுமியுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார். இது தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானது. அவரது செயலை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.