முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 15-ம் தேதி (நாளை) கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த வருடமும் வரும் செப்-15 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அண்ணா பிறந்தநாளையொட்டி 127 காவல்துறை, சீருடை அலுவலர்களுக்கு அண்ணா பதக்கங்கள் வழங்க முதலமைச்சர் முக ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, தலைமைக் காவலர் முதல் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வரை 100 பேருக்கும், தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையில் 8 பேர், சிறைத்துறையில் 10 பேர், ஊர்க்காவல் படை அலுவலர்கள் 4 பேர், விரல்ரேகைப் பிரிவு, தடய அறிவியல் துறையில் தலா இருவருக்கு பதக்கம் வழங்கப்படுகிறது