தமிழக வெற்றிக்கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் தேர்தல் மேலாண்மை பிரச்சார பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் தமிழக வெற்றி கழகத்தின் கல்வி விருது வழங்கும் விழாவில் பேசியதாக கூறப்படும் ஒரு வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது இந்த விழாவின்போது ஆதவ் மற்றும் புஸ்ஸி ஆனந்த் இருவரும் சிரித்தபடியே சகஜமாக பேசும் நிலையில் ஆதவ் அர்ஜுனா அதிமுக பாஜக கூட்டணியிலிருந்து தானாகவே விலகிவிடும்.

அண்ணாமலையாவது 10 பேரை வச்சிக்கிட்டு தேர்தலில் நின்னு 18 சதவீதம் ஓட்டு வாங்கினார். ஆனால் எடப்பாடியை நம்பி எவனும் வர மாதிரி தெரியல என எடப்பாடி பழனிச்சாமியை ஒருமையில் பேசிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முன்னதாக தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் திமுக மற்றும் பாஜாக ஆகிய கட்சிகளை மட்டும் விமர்சித்த நிலையில் அதிமுகவை விமர்சிக்கவில்லை. ஆனால் அதிமுக பாஜகவுடன் கூட்டணி என அமைத்ததும் பழைய பங்காளிகள் மீண்டும் இணைந்ததில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை எனக் கூறி அறிக்கை வெளியிட்டார்.

அதன் பிறகு எப்போதுமே மரியாதையுடன் பேச வேண்டும் என நிர்வாகிகளுக்கு விஜய் அறிவுறுத்தியுள்ளார். அதாவது மற்றவர்கள் விமர்சித்தாலும் நாம் அவர்களை தரக்குறைவாகவோ அநாகரிகமாகவோ பேசக்கூடாது என விஜய் கூறியுள்ள நிலையில் தற்போது ஆதவ் அர்ஜுனா எடப்பாடி பழனிச்சாமியை கிண்டல் செய்யும் விதமாக ஆதவ் பேசிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இது அதிமுகவினர் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.