
சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரத்தில் ஐபிஎல் மெகா ஏலம் 2 நாட்கள் நடைபெற்றது. ஒவ்வொரு அணியும் வீரர்களை போட்டி போட்டு வாங்கியது. இந்நிலையில் டெல்லி அணியின் கேப்டனாக இருந்த ரிஷப் பண்டை லக்னோ அணி வாங்கியது. இதைத்தொடர்ந்து லக்னோ அணி கேப்டனாக இருந்த கேஎல் ராகுலை டெல்லி அணி வாங்கியது.
இதே போன்று அக்சர் படேலையும் டெல்லி அணி வாங்கியது. இதன் காரணமாக டெல்லி அணியின் கேப்டன் யார் என்று கேள்வி எழுந்தது. மேலும் இது தொடர்பாக அந்த அணியின் உரிமையாளர்களில் ஒருவரான பாரத் ஜின்டால் கூறும் போது டெல்லி அணியின் கேப்டனாக அக்சர் படேல் மற்றும் கே எல் ராகுல் இருவருமே செயல்படுவார்கள் என்று கூறியுள்ளார்.