
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கோட்வார் பகுதியில் இளைஞர் ஒருவர் குடிபோதையில் ரகளை செய்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வாலிபர் ஃபுல் போதையில் இருந்த நிலையில் தன்னுடைய இருசக்கர வாகனம் மூலமாக அங்கு வந்த வாகனங்கள் மீது மோதி அட்ராசிட்டியில் ஈடுபட்டார்.
இது தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்த அந்த வாலிபரை கைது செய்தனர். அப்போது அவரை வாகனத்தில் ஏற்றி அழைத்துச் செல்லும்போது குடிபோதையில் போலீஸ் வாகனத்தின் பின் கண்ணாடியை உடைத்து விட்டு வெளியே எட்டிப் பார்த்து அங்கிருந்தவர்களை மிரட்டினார். மேலும் இது தொடர்பான வீடியோஸ் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
In Kotdwar of #Uttarakhand, a youth created a lot of ruckus under the influence of alcohol. The youth hit many vehicles and people with his bike and injured them. The police also had a tough time catching him.
1/2 pic.twitter.com/SNUguvY8ni— Siraj Noorani (@sirajnoorani) January 1, 2025