
அடுத்த வருடம் ஐபிஎல் போட்டி நடைபெற இருக்கும் நிலையில் அடுத்த மாதம் இறுதியில் ஐபிஎல் மெகா ஏலம் நடைபெறுகிறது. முன்னதாக பிசிசிஐ ஒவ்வொரு அணியும் குறைந்தபட்சம் 5 வீரர்களை தக்க வைக்கலாம் என்று அறிவித்த நிலையில் தற்போது ஒவ்வொரு அணியும் தங்கள் தக்க வைத்துள்ள வீரர்கள் குறித்த பட்டியலை வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில் மும்பை அணியில் ரோகித் சர்மா விளையாடும் நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் எம்.எஸ் தோனி விளையாட இருக்கிறார். இதேபோன்று ஆர்சிபி அணியில் மீண்டும் கிங் கோலி விளையாடுகிறார். இவரை அதிகபட்சமாக அந்த அணி 22 கோடி ரூபாய்க்கு தக்க வைத்துள்ளது. மேலும் ஐபிஎல் போட்டியில் அதிகபட்சமாக ஏலத்தில் தக்க வைக்கப்பட்ட இந்திய வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார்.