
பிரசித்தி பெற்ற திருமலை திருப்பதி கோவிலில் நேற்று மதியம் நடைபாதையில் பெரிய மலைப்பாம்பு ஒன்று கண்டறியப்பட்டது. அந்தப் பாம்பு சுமார் 12 அடி நீளத்தில் இருந்த நிலையில் அதனை பார்த்து பக்தர்கள் தெறித்து ஓடினர்.
இது பற்றி வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் பாம்பை பத்திரமாக மீட்டு வனப்பகுதிக்குள் விட்டனர். மேலும் அவர்கள் பாம்பை பிடித்ததன் வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.