பிரபல யூட்யூபர் டிடிஎஃப் வாசன் மீது போலீசில் புகார் அளிக்க இருப்பதாக திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. அதாவது திருப்பதி மலைக்கு தன்னுடைய நண்பர்களோடு சென்றிருந்த TTF வாசன்  சாமி தரிசனம் வரிசையில் பிராங்க் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்திருந்தார்.

இந்த  வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருப்பதி மலையில் பக்தர்கள் மனவருத்தம் அடையும் விதமாக இது போன்ற விரும்பத்தகாத செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது .மேலும் TTF வாசன் உள்ளிட்டவர்கள் மீது போலீசீர் புகார் அளிப்பதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்து வருவதாகவும் அறிவித்துள்ளது.