கன்னட சினிமாவில் வெளிவந்த காந்தாரா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று இந்தியா முழுவதும் வசூல் சாதனை புரிந்த நிலையில் தற்போது காந்தாரா 2 உருவாகி வருகிறது. அதாவது முன்னதாக வெளியான காந்தாரா பாகம் 2 எனவும் தற்போது பாகம் ஒன்று உருவாகிறது எனவும் படகுழுவினர் தெரிவித்துள்ள நிலையில் இந்தப் படத்தின் கலைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காந்தாரா திரைப்படத்தை ரிஷப் செட்டி இயக்கி நடிக்கும் நிலையில் தற்போது அந்தப் படத்தில் நடித்து வரும் மிமிக்ரி கலைஞர் ஆன விஜூ வி.கே (40) என்பவர் மாரடைப்பின் காரணமாக உயிரிழந்தார்.

இவர் கேரளாவில் உள்ள அவரது வீட்டில் இருக்கும்போது மாரடைப்பு ஏற்பட்டதாகவும் அதன் பின்  குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றதாகவும் ஆனால் டாக்டர்கள் செல்லும் வழியில் உயிரிழந்து விட்டதாக கூறியதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதற்கு முன்னதாக கடந்த மே 6ஆம் தேதி காந்தாரா பட குழுவை சேர்ந்த எம்எப் கபில் என்பவர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து கடந்த மே 12-ம் தேதி நகைச்சுவை நடிகர் ராஜேஷ் பூஜாரி திருமண விழாவில் நடனமாடி கொண்டிருந்தபோது மயங்கி விழுந்து உயிரிழந்தார். மேலும் காந்தாரா பட குழுவை சேர்ந்த மூன்று நடிகர்கள் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.