பீகார் மாநிலம் நவாடா மாவட்டத்தில் உள்ள பண்டேல்கண்ட் பகுதியில் 2 பாம்புகள் நடனமாடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், ஒரு குளத்தில் இரு பாம்புகள் ஒன்றை ஒன்று சுற்றி, அசைக்கச் செய்யும் வண்ணத்தில் அழகாக நடனமாடும் காட்சிகள் பதிவாகியுள்ளது. இந்த காணொளியை அருகே சென்ற ஒருவர் தனது மொபைல் மூலம் பதிவு செய்துள்ளார்.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. இந்து மத நம்பிக்கைகளில், நாக-நாகினி ஜோடிகளை பார்ப்பது மிகுந்த மங்களகரமான செயலாகக் கருதப்படுகிறது.  கிராம மக்கள் இந்த காணொளியை ஒரு நல்ல அறிகுறியாகக் கருதி, வரவிருக்கும் நாட்களில் தொடர்ச்சியான மழை பெய்யும் என நம்பிக்கையாக உள்ளனர்.