கர்நாடகா மாநிலம் ஹவேரி அருகே அடூர் பகுதியில் அரசு மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனைக்கு கன்னத்தில் காயங்களுடன் ஒரு சிறுவன் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டான். அந்த சிறுவனுக்கு அங்கிருந்த நர்ஸ் ஒருவர் காயத்திற்கு மருந்து போடுவதற்கு பதிலாக பெவி குயிக் ஒட்டியுள்ளார். இது பெற்றோர் மற்றும் உறவினர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் போட்டோ கூட சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட நர்ஸ் விளக்கம் கொடுத்துள்ளார். அதாவது காயத்திற்கு மருந்து போட்டால் தழும்பு ஏற்படும் என்பதால் பெவி குயிக் வைத்து ஒட்டியதாக கூறியுள்ளார். இந்த சம்பவம் பெரும் சர்ச்சையாக மாறிய நிலையில் அந்த நர்ஸ் ஜோதி பணியிட மாற்றம் செய்யப்பட்டார். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது