
பெங்களூருவில் சாமராஜ் பேட்டை பகுதியில் அமைந்துள்ள ஒரு குடும்பத்தில் சோகமிகு சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. 19 வயதான ஷ்ரவ்யா, பிபிஏ 2-ம் ஆண்டு படித்து வந்த இளம் பெண், தனது அக்காவுடன் ஏற்பட்ட சண்டையால் மன உளைச்சலுக்கு ஆளாகி, தற்கொலை செய்து கொண்டார். பெட்ஷீட்டை வைத்துக் கொள்ளும் விஷயத்தில் அக்கா-தங்கை இடையே பிரச்சனை ஏற்பட்டது. அதாவது ஷ்ரவ்யா தனது அக்காவுடன் கடந்த 18-ம் தேதி இரவு தனது அக்காவுடன் போர்வைக்காக சண்டை போட்டுள்ளார். பெற்றோர் இருவரையும் சமாதானமாக்கி, இருவரையும் தூங்க வைத்தனர்.
இந்நிலையில் ஷ்ரவ்யா பெட்ஷீட் பிரச்சனையை நினைத்து மிகுந்த மன உளைச்சலில் இருந்த நிலையில் மறுநாள் காலை நீண்ட நேரம் ஆகியும் அறையை விட்டு வெளியே வரவில்லை. இதனால் பெற்றோர் சந்தேகத்தில் கதவை உடைத்து பார்த்தபோது அவர் தூக்கில் பிணமாக தொங்கியது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். மேலும் அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று இளம் பெண் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வரும் நிலையில் ஒரு சிறிய பிரச்சனைக்காக இளம் பெண் விபரீத முடிவு எடுத்ததது அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.