நடிகர் ஆதி, நிக்கி கல்ராணி நடிப்பில் கடந்த 2017 ஆம் வெளியான திரைப்படம் மரகத நாணயம். இயக்குனர் ஏ.ஆர்.கே சரவணன் இயக்கத்தில் வெளியானது. இந்த படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. பேண்டஸி காமெடி படமாக உருவான இந்த படத்தை ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனமானது தயாரித்திருந்தது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த இரும்பொறை என்னும் மன்னனுக்கு சொந்தமான மரகத நாணயத்தை கைப்பற்ற முயற்சிக்கும் வகையில் நகைச்சுவையாக உருவானது தான் இந்த படம்.

இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் என்று பட இயக்குனர் ஏற்கனவே கூறி இருந்த நிலையில் தற்போது அது உறுதியாகியுள்ளது. அதாவது மரகத நாணயம் படத்தின்  இரண்டாம் பாகம் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று புகைப்படத்தை பகிர்ந்து இயக்குனர் ஏ.ஆர்.கே சரவணன் கூறியுள்ளார்.