உத்தரப்பிரதேச மாநிலம் மொராடாபாத்தில் உள்ள தீர்த்தங்கர் மகாவீர் பல்கலைக்கழகத்தில் நடந்த அதிர்ச்சிக்கரமான சம்பவம் ஒன்று தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி இரவு 8 மணியளவில் பல்கலை வளாகத்தில் கனமழை பெய்துக் கொண்டிருந்த வேளையில், மரத்தின் கீழ் தஞ்சம் புகுந்திருந்த ஐந்து மாணவர்களை   மின்னல் தாக்கியது. இந்த பயங்கரக் காட்சியின் சிசிடிவி காட்சிகளும் தற்போது வெளியாகி உள்ளன.

 

மின்னல் தாக்கிய அந்த நொடியில் மிகப்பெரிய வெளிச்சம் தெரியும் காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவத்தில் ஐந்து மாணவர்களும் காயமடைந்துள்ளனர். இதில் இருவர் தீவிரமாக காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் நடந்தவுடன் மாணவர்கள் பெரும் பீதி அடைந்து, காயமடைந்தவர்களுக்கு உடனடியாக உதவியுடன் அவர்களை சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். தற்போது இந்த சம்பவம் குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் இந்த சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.