மத்திய பிரதேசத்தில் 30 வயது இளம்பெண் ஓடும் ரயிலில் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கமந்தா ரயிலில் பெண்ணை கமலேஷ் குஷ்வாஹா என்ற வியாபாரி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். ரயில் பெட்டியில் ஒரு பெண் மட்டும் ஏறுவதைக் கவனித்த குற்றவாளி, பின் தொடர்ந்து சென்று கதவுகளை மூடியுள்ளார்.

தொடர்ந்து பெண்ணை வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் அந்த பெண்ணை சத்னா நிலையத்தில் இறக்கிவிட்டு மீண்டும் ரயில்பெட்டியின் கதவுகளை மூடினார். இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் அங்கிருந்த போலீசாரிடம் புகார் அளித்த நிலையில், குற்றவாளியை விரைந்து கைது செய்தனர்.