உத்தரப்பிரதேச மாநிலம் சஹரன்பூர் மாவட்டம் தானா மண்டி பகுதியில் உள்ள ஷாவிலாயத் மொஹல்லா மசூதியில் அதிர்ச்சியூட்டும் திருட்டு சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. வழக்கம்போல தொழுகைக்காக வந்ததாக கூறிய ஒரு நபர், மசூதியில் படுத்திருந்தவரின் மொபைல் போனை திருடிச் செல்வது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

சம்பவம் குறித்து மசூதி நிர்வாகமும், பொதுமக்களும் கடும் வருத்தம் தெரிவித்துள்ளனர். சிசிடிவி காட்சிகளில், சந்தேகத்தின் பேரில் உள்ள நபர் முதலில் மசூதிக்குள் மரியாதையுடன் நுழைந்து, தண்ணீர் குடித்து, பிறகு தொழுகை அமர்கிறார்.

பின்னர், அருகில் படுத்திருந்த நபரின் போனை சார்ஜிங்கிலிருந்து எடுத்து புத்திசாலித்தனமாக பையில் போட்டுக்கொண்டு மசூதியிலிருந்து வெளியேறுகிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி, பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

இந்த சம்பவத்தை அடுத்து, மசூதி கமிட்டி உறுப்பினர்கள், மக்கள் தங்கள் மதிப்புமிக்க பொருட்களை பாதுகாப்பதோடு, மசூதிக்குள் நுழைவோர்களை கவனமாக கண்காணிக்க  வேண்டும் என்றும் கேட்டுள்ளனர்.

குற்றவாளியை அடையாளம் காணும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். சிசிடிவி வீடியோவை ஆய்வு செய்து, குற்றவாளியை விரைவில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.