
2025-ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) மீண்டும் மே 17 முதல் தொடங்கவுள்ளது. 17 போட்டிகள், ஆறு மைதானங்களில் நடைபெற உள்ள நிலையில், இறுதிப் போட்டி ஜூன் 3 அன்று நடைபெறும் என BCCI தெரிவித்துள்ளது. இருப்பினும், இறுதிப் போட்டி நடைபெறும் மைதானம் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
கிரிக்பஸ்ஸின் அறிக்கையின்படி, அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானம், பிளேஆஃப் மற்றும் இறுதிப் போட்டிக்கான முதன்மையான இடமாக கருதப்பட்டு வருகிறது. BCCI, இறுதிப் போட்டி நடைபெறும் இடத்தினை முடிவடையச் செய்யும் முன், ஜூன் மாதத்தில் இந்தியாவில் நிலவும் மழைக்காலம் குறித்த காலநிலை ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.
🗓️ #TATAIPL 2025 action is all set to resume on 17th May 🙌
The remaining League-Stage matches will be played across 6⃣ venues 🏟️
The highly anticipated Final will take place on 3rd June 🏆
Details 🔽https://t.co/MEaJlP40Um pic.twitter.com/c1Fb1ZSGr2
— IndianPremierLeague (@IPL) May 12, 2025
அகமதாபாத்தில் ஜூன் தொடக்கத்தில் மழை பெய்யும் வாய்ப்பு குறைவாக உள்ளதால், அந்த மைதானம் முன்னிலைப் பட்டியலில் உள்ளது. பிசிசிஐ தற்போது மும்பை, லக்னோ, டெல்லி, ஜெய்ப்பூர், பெங்களூரு மற்றும் அகமதாபாத் ஆகிய ஆறு நகரங்களில் மீதமுள்ள லீக் போட்டிகளை நடத்த திட்டமிட்டுள்ளது. பிளேஆஃப் சுற்றுக்கான போட்டிகளின் முழு அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.