
வங்கிக் கடன் மோசடி வழக்கில் DHFL இயக்குநர் தீரஜ் வத்வானை, சிபிஐ போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 17 வங்கிகளில் சுமார் ₹34000 கோடி மோசடி செய்ததாக அவர் மீது புகார் எழுந்த நிலையில், சிபிஐ அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தது. மேலும், மிகப்பெரிய வங்கிக் கடன் மோசடி செய்ததாக தீரஜ் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. முன்னதாக யெஸ் வங்கி ஊழல் வழக்கில் கைதான அவர் ஜாமினில் வெளிவந்தார்.