
பீகார் மாநிலம் சரிதாபாத்தைச் சேர்ந்தவர் மனோஜ்(45). அவரது மனைவி பிரியா. இந்த தம்பதியினருக்கு பவன்(10), கரு(9), முரளி(5), சோட்டு (3) ஆகிய 4 மகன்கள் இருந்தனர். சம்பவம் நடந்த அன்று மனோஜ் தனது மனைவி மீது சந்தேகப்பட்டு தகராறு செய்துள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில் மனோஜ் பூங்காவிற்கு அழைத்துச் செல்வதாக கூறி தனது நான்கு மகன்களையும் கூட்டி சென்றார்.
போகும் வழியிலேயே சிப்ஸ், குளிர் பானங்கள் வாங்கி கொடுத்து அருகில் இருக்கும் ரயில் தண்டவாளம் நோக்கி அழைத்துச் சென்றார். ஒரு மேம்பாலத்தின் கீழ் சுமார் ஒரு மணி நேரம் மகனுடன் காத்திருந்த மனோஜ் ரயில் வந்த போது நான்கு மகன்களையும் இறுக்கமாக கட்டிப்பிடித்துக் கொண்டார். இதனால் பயத்தில் குழந்தைகள் அலறி சத்தம் போட்டனர்.
அதனை காதில் வாங்காமல் மகன்களை பிடித்து கொண்டு மனோஜ் அங்கேயே நின்றார். அப்போது அதிவேகமாக வந்த கோல்டன் டெம்பிள் எக்ஸ்பிரஸ் ரயில் மோதி ஐந்து பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேரின் உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மனோஜின் சட்டை பையில் இருந்த துண்டு சீட்டில் பிரியாவின் செல்போன் எண் எழுதப்பட்டிருந்தது. அந்த எண்ணை தொடர்பு கொண்டு போலீசார் தகவல் தெரிவித்ததும் பிரியா சம்பவம் இடத்திற்கு வந்து கணவர் மற்றும் மகன்களை அடையாளம் காட்டி கதறி அழுதது அங்கு இருந்தோரை கண்கலங்க வைத்தது.